states

img

கேரளா: சரக்கு ரயில் தடம் புரண்டதால் 11 ரயில்கள் ரத்து

கேரளாவில் நேற்று இரவு சரக்கு ரயில் தடம் புரண்டதால் 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கேரளாவில் ஷோரனூர் – எர்ணாகுளம் பிரிவில் ஆளுவா என்ற இடத்தில் சரக்கு ரயில் நேற்று இரவு 10.30 மணியளவில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் அந்த தடத்தில் செல்லும் ரயில்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.  இதனால் கேரளாவில் முக்கிய நகரங்களுக்கு செல்லும் 11 ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  அதன்படி, குருவாயூர் – திருவனந்தபுரம் விரைவு ரயில் (16341) இங்கு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. எர்ணாகுளம் – கண்ணனூர் விரைவு ரயில் (16305) இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

;