states

img

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 12 வயது சிறுமியை மீட்கும் பணி தீவிரம்

குஜராத்தின் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 12 வயது சிறுமியை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குஜராத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள கஜன்வாவ் கிராமத்தில் இன்று காலை 8.30 மணியளவில் விளையாடிக்கொண்டிருந்த 12 வயது சிறுமி கால் தவறி சுமார் 60 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆழ்துளைக் கிணறு நூறு அடி ஆழத்தில் இருக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ராணுவ வீரர்கள் மற்றும், தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.