states

img

கர்நாடகாவில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்து  

கர்நாடகாவில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

கர்நாடக மாநிலம் தாவனகெரே கெலகோடி பகுதியை சேர்ந்த ஹாளப்பா என்பவர் தனது உறவினர் வீட்டின் துக்க நிகழ்வுக்கு 9 பேருடன் ஒரு ஆட்டோவில் சென்றுள்ளனர். அப்போது கத்ராகுளம் அருகே ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி ஆட்டோ மீது விபத்துக்குள்ளானது.

இதைகண்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சித்ரதுர்கா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 9 பேரில் ஹாலப்பா (70), ருத்ரப்பா (58), பசவராஜப்பா (45) ஆகிய 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மீதமுள்ள 6 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனைதொடர்ந்து இந்த விபத்து குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;