பெங்களூரு “முதல்வர் பதவியை ரூ.2,500 கோடி ரூபாய் க்கு ஏலம் விட்டதாக சொந்த கட்சி தலைவர்களால் குற்றம் சாட்டப்பட்ட பிரதமர் மோடிக்கு ஊழல் பற்றிப் பேச தகுதி இல்லை” என கர்நாடக முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் சித்தராமையா மேலும் கூறுகையில்,”ஊழல் குறித்து அடிக்கடி பேசும் பிரத மர் மோடி மீதே பிரம்மாண்ட குற்றச்சாட்டு உள்ளது. அதுயா தெனில் முதல்வர் பதவியை ரூ.2,500 கோடி ரூபாய்க்கு ஏலம் மூலம் விற்று விட்டதாக பாஜக எம்எல்ஏ ஒருவர் மோடி மீது வெ ளிப்படையாக குற்றம் சாட்டியுள் ளார். ஆனால் இந்த விவகாரத் தில் இதுவரை மோடி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. பாஜக எம்எல்ஏக்க ளின் ஊழல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் பிரதமர் மோடி மவுனம் காப்பதன் மூலம் இந்த ஊழல்களுக்கு அவ ரும் உடந்தையாக இருக்கி றாரா? என்ற கேள்வி எழுகிறது.
ஊழல்கள் குறித்து பேசும் பிரதமர் மோடி கர்நாடகாவில், ஊழல் கறை இல்லாத பாஜக தலைவர்களை காட்டினால் தங்களை கர்நாடகாவிற்கு வர வழைத்து கவுரவிக்க தயாராக இருக்கிறேன். கடந்த 11 ஆண்டு களாக பாஜகவில் இணைந்த எதிர்க்கட்சி தலைவர்களின் ஊழல்களை சுத்தம் செய்து அவர்களை பாஜக அலுவலகம் உத்தமர்களாய் மாற்றியதை நாடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது. என் மீது பொய் வழக்கு போட்டுள்ளதை கர்நாடக மக்கள் கவனித்து கொண்டு இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் என்னுடன் மோடி உள்ளிட்ட பாஜகவினர் விவாதிக்க தயாராக இருந்தால் தான் எப்போதும் தயார்” என அவர் கூறியுள்ளார்.