கர்நாடக சட்டமன்றத்தில் அனைத்து உறுப்பினர் இருக்கைகளிலும் அம்பேத்கரின் புகைப்படத்தை வைத்துவிட்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்பு செய்தனர்.
நாடாளுமன்றத்தில், அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ஆவது ஆண்டு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியபோது, “அம்பேத்கரின் பெயரை பயன்படுத்துவது இப்போது ஒரு ‘பேஷன்’ ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று பேசு கிறார்கள். கடவுளின் பெயரை இவ்வாறு பலமுறை சொன்னாலாவது அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்” என்று பேசியிருந்தார். அவரின் இந்த பேச்சு, அம்பேத்கர் பெயரை உச்சரிக்கும் எதிர்க்கட்சி எம்.பி.க்களை கேலி செய்வது மட்டுமன்றி, டாக்டர் அம்பேத்கரையும் அவமதிக்கும் வகையில் இருந்தது. அவரின் இந்தப் பேச்சு, நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டிக்கும் விதமாக கர்நடக சட்டமன்றத்தில் அனைத்து உறுப்பினர் இருக்கைகளிலும் அம்பேத்கரின் புகைப்படத்தை வைத்துவிட்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்பு செய்தனர்.