states

img

ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

சூரத், ஏப்.20- கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘‘எல்லா திருடர்க ளின் பெயரும் மோடி என்றே முடிவது ஏன்?’’ என்று விமர்சித்தார். இது தொடர்பாக குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி சூரத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த மார்ச் 23-ஆம் தேதி ராகுல் குற்றவாளி என அறிவித்ததுடன் அவ ருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. நீதிமன்ற தீர்ப்பால் ராகுல் காந்தி தனது எம்பி பதவியில் இருந்து தகுதி இழந்ததாக மக்களவைச் செயலகம் அறிவித்தது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி சூரத் கூடுதல் செஷன்ஸ் நீதி மன்றத்தில் ராகுல் காந்தி,”தனக்கு விதிக்கப் பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி  வைக்கக் கோரி ஒரு மனுவும், குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி மற்றொரு மனுவும் என 2 மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தார்.

இந்த 2 மனுக்களையும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆர்.பி.மொ கேரா,”ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமீன் வழங்கினார். மேலும் ராகுல் குற்றவாளி என அறிவித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரும் மனு மீது பதில் அளிக்குமாறு புர்னேஷ் மோடிக்கும், குஜராத் மாநில அரசுக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.  இந்நிலையில், வியாழனன்று ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில், மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சூரத் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.   மேல்முறையீட்டு மனு தள்ளுபடியால் ராகுல் காந்தி  எம்.பி. பதவியிலிருந்து தகுதி இழப்பு செய்யப்பட்டது தொடரும் நிலை உருவாகியுள்ளது.  மேலும் உறுதிப்படுத்தப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து, குஜராத் உயர்நீதி மன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும். அங்கு தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு வழக்கும், வழக்கு நடை பெறும் வரையில் தீர்ப்பை நிறுத்திவைக்க மனுவும் அளிக்க வேண்டியச் சூழல் உரு வாகியுள்ளது.