ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக 4 ரயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடத்த ரயில்வே கமிஷன் முடிவு செய்துள்ளது.
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே ஜூன் 2-ஆம் தேதி மாலை 6.55 மணியளவில் மேற்கு வங்கத்தின் ஷாலிமாரிலிருந்து சென்னை நோக்கி வந்த கோர மண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரிலிருந்து ஹவுரா நோக்கி சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் லூப் லைனில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் அடுத்தடுத்து விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர்; 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக பஹனகா ரயில் நிலையத்தில் பணியாற்றும் ஸ்டேஷன் மாஸ்டர் எஸ்.கே.பட்நாயக், கண்காணிப்பாளர்கள் பாண்டா, நாயக், மோகன்தி ஆகிய 4 பேரிடம் விசாரணை நடத்த ரயில்வே கமிஷன் முடிவு செய்துள்ளது.