states

img

தில்லி கண்காட்சி பார்வையாளர் குறிப்பேட்டில் காப்பி அடித்து எழுதிய அசாம் பாஜக முதல்வர்!

திஸ்பூர், ஏப். 5 - தில்லியில் அமைக்கப்பட்டுள்ள கண் காட்சியின் பார்வையாளர் குறிப்பேட் டில், அசாம் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, கருத்துக்களை காப்பி யடித்து எழுதியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பிரதமர் பதவியில் இருந்தவர்களை பற்றி பொதுமக்கள் தெரிந்து கொள்ள தில்லியில் கண்காட்சி அமைக்கப் பட்டுள்ளது இந்த கண்காட்சியை அசாம் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நேரில் பார்வையிட்டார். பின்னர் அங்குள்ள பார்வையாளர் குறிப்பேட்டில் கண்காட்சி தொடர்பான தனது கருத்தைப் பதிவு செய்தார். இதுதான் தற்போது சர்ச்சையாகி உள்ளது.  அதாவது, முதல்வர் சர்மா தனது சொந்தக் கருத்தை எழுதாமல், வேறு  ஒருவர் எழுதிக் கொடுத்ததை அப்படியே பார்த்துக் காப்பி அடித்தது விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியான நிலையில், அவற்றை பகிர்ந்து பலரும் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை, நான்குவரி கூட சொந்தமாக எழுதத் தெரியாதவர் மாநி லத்திற்கு முதல்வரா? இவர் எப்படி பல்கலைக்கழகத்தில் 3 பட்டங்களைப் பெற்றார்? என்று கேள்வி எழுப்பி பலரும் கிண்டலடித்து வருகின்றனர். இதற்கு ஹிமந்தா பிஸ்வா சர்மா தற்போது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், ஆரம்ப சுகாதார பள்ளியில் தாம் அசாமி மொழியில் படித்ததாக கூறியுள்ளார். ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் தனக்கு பெரிய புலமை இல்லை வேண்டும் குறிப்பிட்டுள்ளார்.