அசாமில் கடந்த ஒரு வாரத்தில் விஷ காளான்களை உண்ட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் பிரசாந்த் டிஹிங்கியா கூறுகையில்,
பாதிக்கப்பட்ட அனைவரும் திப்ருகர் மாவட்டத்தில் உள்ள அசாம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்கள் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர்.
கடந்த ஏழு நாட்களில் விஷ காளான் உட்கொண்டதால் ஒரு சிறுவர் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். மேலும் அசாம் பிராந்தியத்தின் திப்ருகர், டின்சுகியா, சிவசாகர் மற்றும் சாரைடியோ ஆகிய 4 மாவட்டங்களில் விஷ காளான் சாப்பிட்ட 39 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார்