உத்தரகண்டில் சுமார் 6 ஆயி ரம் மீட்டர் உயரத்தில் சிக்கித் தவித்த 2 மலையேற்ற வீராங் கனைகள் பத்திரமாக மீட்கப்பட் டுள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் சுமார் 6,995 மீட்டர் உய ரத்தில் உள்ள சவுகாம்பா-3 மலை சிக ரத்தில் ஏறும் முயற்சியில் அமெரிக்கா வைச் சேர்ந்த மிச்சேல் தெரசா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த பேவ் ஜேன் ஆகிய 2 மலையேற்ற வீராங்கனை கள் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் இந்திய மலையேறும் அறக்கட்டளை யின் சார்பில் நடைபெறும் வெளி நாட்டவருக்கான மலையேற்ற சாக சத்தின் ஒரு பகுதியாக இந்தியா விற்கு வந்திருந்தனர்.
இந்நிலையில், கடந்த 3 ஆம் தேதி, 2 மலையேற்ற வீராங்கனை களும் சுமார் 6,015 மீட்டர் உயரம் வரை மலையில் ஏறியபோது அவர் கள் கொண்டு சென்ற தளவாட மற்றும் தொழில்நுட்ப உபகரணங் கள் கீழே விழுந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு வரும் மேற்கொண்டு மலையேற முடி யாமலும், கீழே இறங்க முடியாம லும் சிக்கிக் கொண்டனர்.
சுமார் 6 ஆயிரம் மீட்டர் உய ரத்தில் 3 நாட்களாக அவர்கள் சிக்கித் தவித்த நிலையில், இந்திய விமா னப்படை ஹெலிகாப்டர் உதவியுடன் தேடும் முயற்சி நடைபெற்றது. ஞாயிறன்று இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலம் சீராக இருப்பதாக மாவட்ட பேரிடர் மீட்பு மையம் தக வல் தெரிவித்துள்ளது.