states

img

உ.பி: சரக்கு ரயிலை கவிழ்க்க முயற்சி?

உத்தரப் பிரதேசத்தில் உள்ள கான்பூர் மாவட்டத்தில், அடையாளம் தெரியாத நபர்கள் ரயில் தண்டவாளத்தில் எரிவாயு சிலிண்டர் வைத்துவிட்டு சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரிலிருந்து பிரயாக்ராஜ் நோக்கிச் சென்ற சரக்கு ரயில், அதிகாலை 5.50 மணிக்கு பிரேம்பூர் ரயில் நிலையம் அருகே வந்தபோது, தண்டவாளத்தில் எரிவாயு சிலிண்டர் கிடப்பதைக் லோகோ பைலட் கவனித்துள்ளார். உடனடியாக அவசரகால பிரேக்கைப் பயன்படுத்தி ரயிலை நிறுத்தினார். தகவல் அறிந்து அங்கு வந்த ரயில்வே போலீசார் செய்த சோதனையில், அங்கிருந்தது காலி சிலிண்டர் என்று தெரியவந்துள்ளது. தண்டவாளத்தில் எரிவாயு சிலிண்டரை வைத்து சென்றவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி பிவானியில் இருந்து பிரயாக்ராஜ் சென்ற காளிந்தி எக்ஸ்பிரஸ் ரயில், கான்பூரில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த எல்பிஜி சிலிண்டரில் மோதி நிறுத்தப்பட்டது. உத்தரப்பிரதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் 6 முறை இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.