districts

img

வால்பாறை: தேயிலை தோட்டத் தொழிலாளியை தாக்கிய கரடி

வால்பாறையில் கரடி தாக்கியதில் தேயிலை தோட்டத் தொழிலாளி படுகாயமடைந்தார்.

கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட சிறுகுன்றா தேயிலை தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை உரம் இடும் பணியில் ஈடுபட்டிருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சார்ந்த அமீர் ஓராண் என்பவர எதிர்பாராத விதமாக தேயிலை தோட்டத்திற்குள் பதுங்கி இருந்த கரடி திடீரென தாக்கியது.

உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கரடியுடன் போராடிய போது அமீர் ஓராணின் இடது கை மற்றும் உடலில் பல பகுதிகளில் கரடி கடித்து குதறியது. அவர் எழுப்பிய அலறல் சத்தம் கேட்டு உடன் பணிபுரியும் தொழிலாளர்கள் கரடியை அங்கிருந்து விரட்டி அடித்தனர்.

வடமாநில தொழிலாளி படுகாயம் அடைந்த தகவல் குறித்து தகவல் அறிந்த விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் மருத்துவக் குழு அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

பின்பு, மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். வட மாநில தொழிலாளியை கரடி கடித்த சம்பவம் வால்பாறையில் தொழிலாளர் மத்தியில் பயத்தை ஏற்படுத்தி உள்ளது.