tamilnadu

img

பட்டியலின மக்களை அவமதிக்கும் காவல் ஆய்வாளர் நடவடிக்கை எடுக்கக்கோரி டிஐஜி-யிடம் புகார்

பட்டியலின மக்களை அவமதிக்கும் காவல் ஆய்வாளர் நடவடிக்கை எடுக்கக்கோரி டிஐஜி-யிடம் புகார்

சேலம், ஜூன் 6- பட்டியலின மக்கள் அளிக் கும் புகார்களை நீர்த்துப்போக செய்யும் வகையில் செயல்பட்டு வரும் காவல் ஆய்வாளர் மீது நட வடிக்கை எடுக்கக்கோரி, சேலம் சரக காவல் துறை துணைத்தலை வர் அலுவலகத்தில் புகாரளிக் கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், புதுச் சத்திரம் காவல் ஆய்வாளர் கோமதி, பட்டியலின மக்கள் கொடுக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்தியும், அது  தொடர்பாக கேள்வி எழுப்பும் பட்டியலின சமூக அமைப்பினர் மற்றும் அரசியல் பிரதி நிதிகளை மரியாதை குறைவாக நடத்தி வருவ தாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அவரி டம் பலமுறை முறையிட்டும் அவர், புகார் தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்ப தாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சேலம் சரக காவல் துறை துணைத்தலைவர் அலுவலகத்தில் அனைத்து மக்கள் ஜனநா யக உரிமை மீட்பு கூட்டமைப்பினர் வெள்ளி யன்று புகார் ஒன்றை அளித்தனர்.  இதன்பின் அவர்கள் செய்தியாளர்களி டம் பேசுகையில், புதுச்சத்திரம் காவல் ஆய் வாளர் பட்டியலின மக்கள் கொடுக்கக்கூடிய புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்ப தில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் இதேபோன்றே நடந்து வருகிறார். எனவே, அவர் மீது துறை ரீதியான நடவ டிக்கை எடுத்து, பட்டியலின மக்களின் உரி மைகளை பாதுகாக்க வேண்டும், என்றனர். இந்நிகழ்வில், விடுதலை சிறுத்தைகள் கட்சி நாமக்கல் மாவட்டச் செயலாளர் நீல வானத்து நிலவன், தமிழ் புலிகள் கட்சி சேலம் நிர்வாகி உதய பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.