states

img

ஜெய்ஸ்ரீராம் முழங்ககோரி சிறுவனை தாக்கிய விவகாரம்: குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கைது

 ஜெய்ஸ்ரீராம் முழங்ககோரி சிறுவனை தாக்கிய விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹைதராபாத்தில் உள்ள ஓல்ட் சிட்டியின் சார்மஹால் பகுதியில் போனலு ஊர்வலத்தின் போது ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிட மறுத்ததற்காக17 வயது சிறுவனை சில நபர்கள் தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “ஹுசைனி ஆலம் பகுதியில் வசிக்கும் 17 வயது கொண்ட சிறுவன் கடந்த வியாழக்கிழமை இரவு நடந்து சென்றுள்ளான். சார்மினார் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஷாட் கஃபே ஹுசைனி ஆலத்திலிருந்து போனலு ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. திடீரென்று, ஒரு கும்பல் அச்சிறுவனை தடுத்து நிறுத்தி, அவரது நெற்றியில் திலகம் பூசி, ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிட கோரி கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. ஜெய்ஸ்ரீராம் என்று முழக்கமிட சிறுவன் மறுத்ததால் அவனைத் தாக்கியதாக கூறப்படுகிறது. சிறுவன் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுவன் சார்மினார் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. காவல் துறையினர் குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.

தாக்குதலில் ஈடுபட்ட ரூபேஷ் சர்மா என்பவர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.