states

img

5 கோடி கரும்பு விவசாயிகளைப் பாதிக்கும் உத்தரவு

திண்டுக்கல்,அக்.18- 5 கோடி கரும்பு விவசாயிகளை பாதிக்கும் சர்க்கரை கட்டுப்பாடு உத்தரவு-2024 ஐ நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து ஒன்றிய உணவு- பொது விநியோகத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோசிக்கு அனுப்பிய கடிதம் வருமாறு:    அவர் அனுப்பிய கடிதம் வருமாறு: தற்போது நடைமுறையில் உள்ள சர்க்கரை கட்டுப்பாடு உத்தரவு (sugarcane control order-1966)  சட்டத்தில் கரும்பு விவசாயிகளுக்கு பலனளிக்கும் சட்டப் பிரிவுகளை ஒவ்வொன்றாக ஒன்றிய அரசு நீக்கி வருகிறது.  சர்க்கரை ஆலை களுக்கு வரும் லாபத்தில் விவசாயிகளுக்கு கூடுதல் விலை தர வழிவகுத்த   5ஏ பிரிவை ரத்து  செய்தார்கள். மாநில அரசுகள் கரும்பு விவசாயி கள் நலன்களை பாதுகாத்திட மாநில பரிந்துரை விலை (State Advised Price)  அறிவித்து வழங்கு வதற்கான சர்க்கரை கட்டுப்பாடு உத்தரவு (sugarcane control order 1966)இல் இருந்த சட்டப்பிரிவை ரத்து செய்தார்கள். ஒன்றிய அரசு 8.5 சதவீதம் பிழி திறன் கரும்புக்கு விலை அறிவித்து வந்ததை படிப்படியாக உயர்த்தி  தற்போது 10.25 ரெக்கவரி கரும்புக்கு விலை அறிவிக்கின்றது. கரும்பு விவசாயிகளுக்கு பலனளித்த பல சட்டப் பிரிவுகளை ஒன்றிய அரசு ஏற்கனவே  நீக்கி விட்டனர்.

 தற்போது  சர்க்கரை கட்டுப்பாடு உத்தரவு (sugar control order-2024) ஒன்றிய பாஜக அரசு அறிவித்து   சர்க்கரை ஆலைகள் மற்றும் மாநில அரசு சர்க்கரை துறைகளிடம் கருத்து  கேட்டிருக்கிறார்கள். விவசாயிகளிடம் கருத்துக் கேட்கவில்லை.  தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சர்க்கரை கட்டுப்பாடு உத்தரவு-2024 சட்ட முன்மொழிவில் சர்க்கரை ஆலைகள் உற்பத்தி செய்திடும் சர்க்க ரையை, எத்தனால் உட்பட உப பொருட்களை விற்க வேண்டுமானால் ஒன்றிய அரசின் அனு மதியை பெற வேண்டும் என்றுள்ளது. வங்கிகளில் அடகு வைத்த சர்க்கரையை சர்க்கரை ஆலைகள்  எடுத்து விற்க வேண்டும் என்று சொன்னால் கூட ஒன்றிய அரசிடம்  அனுமதி பெற  வேண்டும் என்று சர்க்கரை கட்டுப்பாடு உத்தரவு (sugar control order) - 2024 சட்ட முன்மொழிவில் உள்ளது.   இந்த சட்டம் அமலுக்கு வந்தால் கரும்பு விவசாயி களுக்கு1966 ஆம் ஆண்டு சட்டத்தில்  உள்ள படி  விவசாயிகளுக்கு  14 நாட்களுக்குள்  சர்க்க ரை ஆலைகள் கரும்புக்கான பணத்தை  வழங்கிட வேண்டும் என்பது ரத்து செய்யப் பட்டுவிடும் சர்க்கரை ஆலைகள் அவர்கள் விரும்புகிறபோது விவசாயிகளுக்கு கருப்புக்கான பணத்தை கொடுப்பதற்கு  சட்டமே  அனுமதிக்கிற  நிலைமை ஏற்படும். இது நாடு முழுவதும் இருக்கிற ஐந்து கோடி  கரும்பு விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிற செயலாகும். இந்தியாவின்  கூட்டாட்சி அமைப்பு முறையில் மாநிலங்களுக்கு இருக்கிற உரிமை களை  பறித்து  ஒன்றியத்தில்  அதிகாரத்தை குவிக் கிற செயலாக இந்த சட்டம் அமைந்து விடும். ஆகவே இந்த சட்டத்தை  அமல்படுத்தக் கூடாது. ஒன்றிய அரசு கரும்பு  விவசாய பிரதி நிதிகளிடம் கருத்து கேட்க வேண்டும்.

சர்க்கரை விற்க இலக்கு தீர்மானிக்காதீர்!

தற்போது ஒன்றிய அரசு, சர்க்கரை ஆலைகள் உற்பத்தி செய்திடும் சர்க்கரையை விற்பனை செய்வதற்கு மாதா மாதம் இலக்கு நிர்ணயிக்கின்றனர். இதனால் சர்க்கரை ஆலைகள் உரிய காலத்தில் சர்க்கரையை விற்க முடியாமல் சிரமப்படுகின்றனர் சர்க்கரை விற்பதற்கு இலக்கு தீர்மானித்திடும் முறை யை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். கரும்பு விவசாய சங்கங்களின் பிரதிநிதி களிடம் கருத்து கேட்டு தீர்மானித்திடவேண்டும். அது வரை முன்மொழியப்பட்டுள்ள சர்க்கரை கட்டுப்பாடு உத்தரவு-2024 ஐ ஒன்றிய அரசு அமல்படுத்திடக்கூடாது என்று கேட்டுக் கொள் கிறேன். இவ்வாறு அதில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.