states

img

தலித் சிறுமிக்கு கும்பல் பாலியல் வன்முறை : ராஜஸ்தானில் சிபிஎம் போராட்டம்

பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூருக்கு அருகே ஜெய்சிங்புரா கோரில் கடந்த அக்டோபர் 9 அன்று 12 வயதுக்குட்பட்ட தலித் சிறுமி கும்பல் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார். மேலும் அச்சிறுமியை கொடூரமாக தாக்கி சாலையில் தூக்கி எறிந்து சென்றுள்ளது 4 பேர் கொண்ட கும்பல். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்நிலையில், பாதிக்கப்பட்ட தலித் சிறுமிக்கு நீதி வழங்கக் கோரியும், குற்றவாளிகளை விரைவில் கைது செய்யக் கோரியும் ஜெய்ப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் பொதுமக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் சிபிஎம் ஜெய்ப்பூர் மாவட்ட செயலாளர் சஞ்சய் மாதவ், மாநிலக் குழு உறுப்பினர் சுமித்ரா சோப்ரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.