சிவகங்கை, செப். 13 மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மறைவையொட்டி அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிவகங்கையிலும் இளையாங்குடியிலும் இரங்கல் நிகழ்வு நடந்தது . சிவகங்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பொறுப்பு கருப்புசாமி தலைமையில் இரங்கல் ஊர்வலம் நடந்தது .அரண்மனை வாசலில் அஞ்சலி கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சாத்தையா ,ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட செயலாளர் ராமு, திராவிட கழக மாவட்ட பொறுப்பாளர் புகழேந்தி ஆகியோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.