states

சிறுபான்மையினரின் உண்மையான தோழர்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செய லாளர் சீத்தாராம் யெச்சூரியின் மறைவுச் செய்தி அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன். சிறுபான்மையினருக்கு எதிராக எப்போதெல்லாம் அடக்கு முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகிறதோ அப்போதெல்லாம் உடனடியாக எதிர்வினை ஆற்றிய உண்மையான தோழர். சச்சார் குழு தனது அறிக்கையைத் தாக்கல் செய்த போது அதன் பரிந்துரைகளை உடனே அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியவர். சிறந்த எழுத்தாளராகத் திகழ்ந்த தோழர் யெச்சூரி அவ்வப் போது முக்கிய நாளிதழ்களில் அறிவார்ந்த கட்டுரைகளை எழுதியவர். இந்துத்துவம் குறித்தும் வகுப்புவாதம் குறித்தும் அவர் எழுதிய இரு ஆங்கில நூல்கள் தரமானவை. தோழர் யெச்சூரியின் இறப்பு ஈடுசெய்ய முடியாதது. அவரை இழந்து வாடும் இடதுசாரித் தோழர்களுக்கும் அவரது குடும்பத்தின ருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

- எம்.எச்.ஜவாஹிருல்லா,  தலைவர், மனிதநேய மக்கள் கட்சி.