states

img

நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு அரசே ஊதியம் வழங்கக் கோரி தர்ணா

புதுச்சேரி, மார்ச் 3- நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு அரசே ஊதியம் வழங்க வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன கவுரவத் தலைவர் பாலமோகனன், மத்திய கூட்ட மைப்பு தலைவர் லட்சுமணசாமி தலை மையில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தர்ணா போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி உள்ளாட்சி துறையின் கீழ் இயங்கும் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணி யாற்றும் ஊழியர்களுக்கு, தமிழ்நாடு, கேரளா ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் அரசே ஊதியம் வழங்குவது போல் வழங்க வேண்டும், எதிர்வரும் நிதிநிலை கூட்டத்தொடரில் அதற்காக நிதி ஒதுக்க வேண்டும்,  7ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை 2016இல் இருந்து நகராட்சி ஊழியர்க ளுக்கும் அமல்படுத்த வேண்டும், 2004 ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த நகராட்சி ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தையே நடை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் சம்மேளன தலைவர் ரவிச்சந்திரன், பொதுச் செயலாளர் ராதா கிருஷ்ணன், நகராட்சி ஊழியர் சங்க தலைவர்கள் ஆனந்த கணபதி, கலியபெருமாள் ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர்.