புதுச்சேரி,ஜூன் 7- புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்து கழகம் மூலமாக இயக்கப்படும் பேருந்துகளை நவீனப் படுத்தி இயக்கக் கோரியும் பழுதடைந்த பேருந்துக ளுக்கு பதிலாக புதியதாக தொலைதூர மற்றும் சொகுசு பேருந்துகளை மாகே, நாகர்கோயில், பெங்களூரு, சென்னை, திருப்பதி ஆகிய வழித்தடங்களில் தொடர்ந்து இயக்கிட வலி யுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர்சங்கம் சார்பில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள அரசின் சாலை போக்கு வரத்து கழக பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு வாலிபர் சங்கத்தின் பிரதேச தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கி னார். பிரதேச செயலாளர் ஆனந்து, கேரளா மாநிலம் கண்ணுர் மாவட்டக்குழு உறுப்பினர் சனீஸ், மாஹே பகுதிச் செயலாளர் தனி லேஷ், பள்ளுர் பகுதிச் செய லாளர் ரோஷித், நிர்வாகிகள் நீரஜ், ராகேஷ், சனூஷ், கருண், விஜீஷ்,நவீன், நில வழகன் ஆகியோர் கோரிக் கைகளை வலியுறுத்தி பேசினர்.