states

img

மணிப்பூரில் மீண்டும் இணைய சேவைக்கு தடை!

மணிப்பூர்,ஜூன்.08- மணிப்பூரில் மீண்டும் கலவரம் ஆரம்பமானதால் இணைய சேவைகள் முடக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரில் மெய்தி சமூகத்தை சேர்ந்த ஆரம்பை டெங்கோல் அமைப்பின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, இம்பாலில் ஆங்காங்கே போராட்டங்கள், துப்பாக்கிச்சூடு சம்பவங்கள், போராட்டங்கள் தலைதூக்கியதால் பதற்றம் அதிகரித்துள்ளது 
இந்நிலையில் ஏற்கனவே குடியரசு தலைவர் ஆட்சி அமலில் உள்ள மணிப்பூரில், வன்முறை காரணமாக ஜூன் 7 நள்ளிரவில் இருந்து இம்பால் மேற்கு, தவுபால், காக்சிங், விஷ்ணுபூரில் 5 நாட்களுக்கு இணையச்சேவை தடை விதிக்கப்பட்டுள்ளது.