மும்பையில் தேசியவாத காங்கிரஸ்(அஜீத்பவார்) கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை அடையாளம் தெரியாத நபர்கள் சனிக்கிழமை மாலை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த இவர், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி அண்மையில் தேசியவாத காங்கிரஸில் இணைந்தார்.
மகாராஷ்டிராவில் சட்டம், ஒழுங்கு சீரழிந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இன்னும் சில மாதங்களில் பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், மகாராஷ்டிரத்தில் நிகழ்ந்த இந்த படுகொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சித்திக் படுகொலை செய்யப்பட்டதற்கு மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜீத்பவார், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.