states

img

மகாராஷ்டிரா: 11 பேரைக் கொன்ற புலி கூண்டில் அடைப்பு

மகாராஷ்டிரத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 11 பேரைக் கொன்ற புலி கூண்டில் அடைக்கப்பட்டது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் சந்திரபூர் மாவட்டத்தில் சிச்பள்ளி வனப்பகுதியில் உலவி வந்த பெண்  புலி கடந்த 3 ஆண்டுகளில் 11 பேரை கொன்றுள்ளது.

டி-83 என்று அழைக்கப்படும் அந்தப் பெண் புலி நேற்று காலை ஜனலா எனும் பாதுகாக்கப்பட்ட பகுதியில் சுற்றித் திரிந்தபோது வனத்துறை அதிகாரிகளால் மயக்க மருந்து செலுத்திப் பிடிக்கப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்டது.

கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

முன்னதாக பலமுறை கூண்டுகள் வைத்து பிடிக்க முயற்சி செய்தும் தப்பித்துவந்த இந்தப் புலி 3 ஆண்டுகளுக்குப் பின்னர் பிடிக்கப்பட்டதால் அதிகாரிகள் நிம்மதியடைந்தனர்.