வெளிநாட்டு நித்யை பெற மகாராஷ்டிராவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், கேரளாவுக்கு மட்டும் அனுமதி மறுத்தது ஏன்? என கேரள நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால் கேள்பி எழுப்பியுள்ளார்.
மகாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பாஜக- சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சி நடக்கிறது.
மகாராஷ்டிராவுக்கு வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம்-2010இன் கீழ் முதல்வரின் நிவாரண நிதிக்கு வெளிநாட்டு நிதியை பெற, ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது.
இந்நிலையில், இது தொடர்பாக கேரள நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால் திருவனந்தபுரத்தில் கூறியதாவது,
கேரளம், கடந்த 2018 இல் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அப்போது வெளிநாடுகளில் இருந்து கேரளாவுக்கு ஏராளமான உதவிகள் கிடைக்கவிருந்தன. அதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்தோம்.ஆனால் ஒன்றிய அரசு அனுமதி தரவில்லை.
தற்போது, வெளிநாட்டு நிதியைப்பெற மகாராஷ்டிரா அரசுக்கு மட்டும் ஒன்றிய அரசு அனுமதி வழங்கி உள்ளது. எதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படுகிறது? அனைத்து விவகாரங்களிலும் பாஜக அரசியல் செய்கிறது.
மகாராஷ்டிரா அரசு வெளிநாட்டு உதவியை பெறுவதில், கேரளாவுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் கேரளாவுக்கு அனுமதி மறுத்ததை ஏற்க முடியாது. அதில் எந்த நியாமும் இல்லை.
ஒன்றிய அரசின் இந்த நிலைபாடு, நாட்டின் கூட்டாட்சி கொள்கைகளை மீறுவதாகும், பேரிடர்களின் போது கூட, அரசியல் காரணங்களுக்காக மாநிலங்களை வேறுபடுத்துவது, ஒன்றிய அரசுக்கும்,மாநிலங்களுக்கும் இடையிலான ஆரோக்கியமான உறவுகளுக்கு தீங்கு விளைவிக்கும். நாட்டின் அனைத்து மாநிலங்களையும் ஒன்றிய அரசு சமமாக நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.