states

img

பெங்களூரு கட்டட விபத்து - பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

பெங்களூரில் கட்டுமான பணியின்போது கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. 
கர்நாடக மாநிலம், பெங்களூரு, ஹென்னூரில் கடந்த 22.10.2024 அன்று பிற்பகலில் பெய்த கனமழையின் காரணமாக கட்டுமானப்பணி நடந்துகொண்டிருந்த கட்டடம் எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒருவரின் உடல் இடிபாடுகளுக்கு இடையே இருந்து மீட்கப்பட்டுள்ளது. அது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் உடல் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.