states

img

“விசாகப்பட்டினம் சர்வதேச நீர்மூழ்கி  கேபிள் நுழைவாயிலாக மாறும்”

“விசாகப்பட்டினம் சர்வதேச நீர்மூழ்கி  கேபிள் நுழைவாயிலாக மாறும்”

புதுதில்லி தில்லியில் நடைபெற்று வரும் ஏஐ உச்சி மாநாட்டில் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை (தமிழ்நாட்டை பூர்வீமாக கொண்டவர்) பேசுகையில்,”இந்தியாவுக்கு மீண்டும் வருவது மிகவும் அருமையாக இருக்கிறது. நான் ஒவ்வொரு முறை வருகை தரும் போதும், மாற்றத்தின் வேகத்தால் வியப்படைகிறேன். நான் ஒரு மாணவனாக இருந்தபோது சென்னையில் இருந்து ஐஐடி கோரக்பூர் வரை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிக்கடி சென்றேன். அந்த ரயில் விசாகப்பட்டினம் வழியாக செல்லும். இப்போது விசாகப்பட்டினம் நகரத்தில் கூகுள் நிறுவனம் 15 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் ஏஐ மையத்தை நிறுவ உள்ளது. இந்த மையம் ஜிகாவாட் அளவிலான கணினி மற்றும் ஒரு புதிய சர்வதேச நீர்மூழ்கி கேபிள் நுழைவாயிலைக் கொண்டிருக்கும். இது இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கும் வணிகங்களுக்கும் வேலைவாய்ப்புகளையும் அதிநவீன ஏஐ-யையும் கொண்டு வரும். ஏஐ என்பது மறுக்க முடியாத வகையில் பணியாளர்களை மறுவடிவமைக்கும். முற்றிலும் புதிய தொழில்களை உருவாக்கும்” என அவர் கூறினார்.