ரூ.6 கோடி வழங்கிய ஐக்கிய அரபு அமீரக தொழிலதிபர்
மருத்துவ மாணவர்களுக்கு இழப்பீடு வழங்காமல் புறக்கணித்த மோடி அரசு
ஜூன் 12ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து இங்கி லாந்து தலைநகர் லண்டனில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், விமான நிலையத்துக்கு அருகே மேகானி நகரில் உள்ள பி.ஜே மருத்துவக் கல்லூரியின் விடுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் பலியாகினர். பலியானவர் குடும்பங்களுக்கு தலா ரூ.1.25 கோடி இழப்பீடு வழங்கப்படும் என ஏர் இந்தியாவின் டாடா குழுமம் அறிவித்துள்ளது. ஆனால் விமானம் விழுந்த மருத்துவக் கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்த 7 மருத்துவ மாணவர்கள் பலி யாகினர். மேகானி நகரில் சிலரும் என மொத்தம் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆனால் விமானத்தில் பயணிக்காமல் மேகானி நகர் பகுதியில் உயிரிழந்தவர்களுக்கு டாடா குழுமம் இதுவரை இழப்பீடு அறிவிக்கவில்லை. ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான மருத்துவ மாணவர்கள் குடும்பத்துக்கும் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று டாடா குழுமத்தின் நிர்வாகி என்.சந்திரசேகரனுக்கு இந்திய மருத்துவக் கழகம் வேண்டுகோள் வைத்துள்ளது. ஆனால் இன்றுவரை இந்த கோரிக்கைக்கு ஏர் இந்தியா எவ்வித பதிலும் அளிக்கவில்லை. அதே போல ஒன்றிய மோடி அரசும், குஜராத் பாஜக அரசுகளும் இழப்பீடு என்ற வார்த்தையை உச்சரிக்காமல் விமான விபத்தில் சொந்தங்களை இழந்த குடும்பங்க ளை தொடர்ச்சியாக புறக்கணித்து வருகின்றன. ஐக்கிய அரபு அமீரக தொழிலதிபர் இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதா பாத் விமான விபத்தில் உயிரிழந்த மாணவர்க ளுக்காக மனம் வருந்தி, அவர்களின் குடும்பங்க ளுக்கு நிதியுதவி செய்ய முன்வந்துள்ளார் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி தொழிலதிபர் டாக்டர் ஷம்ஷீர் வய லில். இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக் கத்தில் அவர் மேலும் கூறுகையில்,”விமான விபத்தில் உயிரிழந்த மருத்துவ மாணவர்கள் தான் எதிர்காலத்தின் முன்னணி ஹீரோக்கள். மானவ், ஆர்யன், ராகேஷ், ஜெய்பிரகாஷ் உள்ளிட் டோர் பிறரின் உயிர்களைக் காக்க, தயாராகி வந்தனர். தங்கள் உயிரை இழப்பதற்கல்ல. ஆனால் ஏர் இந்தியா விபத்து அவர்களை நம்மி டம் இருந்து எடுத்துக்கொண்டது. அவர்களது குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்ட மற்றவர்க ளுக்கும் ஆதரவளிக்க ரூ.6 கோடி உறுதியளிக் கிறேன்” என ஷம்ஷீர் வயலில் கூறியுள்ளார். லுலு குரூப் உரிமையாளர் மருமகன் மருத்துவரும் தொழிலதிபருமான டாக்டர். ஷம்ஷீர் வயலில் பிரபல சில்லரை வணிக கூட்டு நிறுவனமான லுலு குரூப் இண்டர்நேஷ னல் நிறுவனத்தின் உரிமையாளர் எம்.ஏ.யூசுப் அலியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.