states

img

ஜம்மு - காஷ்மீரில் பஹல்காம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறப்பு

ஜம்மு - காஷ்மீரில் பஹல்காம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறப்பு

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பஹல்காம் மட்டுமின்றி ஜம்மு-காஷ்மீரிலுள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டன. இதனால், சுற்றுலாத் துறையை பெரிதும் சார்ந்திருந்த உள்ளூர்வாசிகளின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் அரசு உத்தரவுக்குப் பின் பஹல்காம் உட்பட 16 பூங்காக்கள் (ஜம்மு - 8, காஷ்மீர் - 8) திங்களன்று திறக்கப்பட்டன. தொடர்ந்து செவ்வாயன்று முதல் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். பூங்காக்கள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகளை உள்ளூர்வாசிகள் உற்சாகத்தோடு வரவேற்றனர்.