states

ஒன்றிய அரசு கேரள மக்களை கைவிட்டு விட்டது : உயர்நீதிமன்றம் கடும் சாடல்

ஒன்றிய அரசு கேரள மக்களை  கைவிட்டு விட்டது  உயர்நீதிமன்றம் கடும் சாடல்

திருவனந்தபுரம்  கேரள மக்களை ஒன்றிய அரசு கைவிட்டு விட்டது. கேரள மக்களுக்கு உதவ ஒன்றிய அரசுக்கு மனம் உள்ளதா? மனமில்லை என்றால் தைரியமாக சொல்லி விடுங்கள். உங்களுடைய கருணையை எதிர்பார்த்து இந்த மாநில மக்கள் இல்லை என கேரள உயர்நீதிமன்றம் ஒன்றிய பாஜக அரசை கடுமையாகச் சாடியுள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் 2024 ஜூலை மாதம் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச் சரிவில் 260 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரி ழந்தனர். மேலும் பல வீடுகள் தரைமட்டமாகின. இந்த பேரிடரால் மக்கள் வாழ்க்கையை இழந்து நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.  ஒன்றிய பாஜக அரசு அவர்களுக்கு எந்த நிதி உதவியும் செய்யவில்லை. எனவே மாநில  அரசே மக்களின் உதவியுடன் பேரிடர் பாதித்த பகுதியில் மறுகட்டமைப்புப் பணிகளை மிகப் பெரிய அளவில் மேற்கொண்டது. இந்த மக்க ளுக்கான நிவாரணம் தொடர்பாக கேரள உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து மறுகட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டது. அது தொடர்பான வழக்கில் கேரள மக்களை ஒன்றிய அரசு கைவிட்டுவிட்டதாக உயர்நீதிமன்றம் சாடியுள்ளது. இந்த வழக்கின் ஒரு பகுதியாக வய நாடு பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்கெ னவே வங்கிகளில் இருக்கக் கூடிய கடன் தொகை நிலுவையாக உள்ளது. அந்த கடனை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஒன்றிய அரசு, வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களின் கடன்களை தள்ளுபடி செய்ய விதிகள் அனுமதிக்கவில்லை என வாதத்தை முன்வைத்தது. இதனால் மிகுந்த ஏமாற்றமடைந்த உயர்நீதிமன்ற அமர்வு கடுமையான கண்டனத்தை பதிவு செய் தது. அதில் நீதிபதிகள் ஜெய்சங்கரன் நம்பியார் மற்றும் ஜோபின் செபாஸ்டியன் அமர்வு ஒன்றிய அரசின் பாரபட்சத்தை அம்பலப்படுத்தும் வித மாக கேள்விகளை கேட்டுள்ளது. அவர்கள் கேட்டதாவது : கேரள மக்களுக்கு உதவ ஒன்றிய அரசுக்கு மனம் உள்ளதா..? மன மில்லை என்றால் தைரியமாக சொல்லிவிடுங் கள். உங்களுடைய கருணையை எதிர்பார்த்து இந்த மாநில மக்கள் இல்லை. குறைந்தபட்சம் இது போன்ற இக்கட்டான சூழலில் மக்கள் பாதிக்கப் பட்டாலும் கூட எங்களால் உதவ முடியாது என வெளிப்படையாகக் கூறிவிட்டால் குறைந்தபட்சம் அந்த மாநில மக்கள், எந்த இக்கட்டான சூழலிலும் ஒன்றிய அரசிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்காது என்பதையாவது தெரிந்து கொள் வார்கள். அதைச் சொல்வதில் உங்களுக்கு என்ன பிரச்சனை உள்ளது என கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் ஏற்கெனவே தெளிவுபடுத்திய பின்பும் ஒன்றிய அரசு தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று விதிகளின் பின்னால் சென்று ஒளிந்துகொள் கிறது. பாஜக ஆளும் குஜராத், அசாம் போன்ற மாநிலங்களில் இதேபோல் இயற்கைப் பேரிடர் நிகழ்ந்த போது ஒன்றிய அரசு எவ்வாறு முன்வந்து உதவிகளை வழங்கியது என்பது குறித்தான கட்டுரைகளையும் அவர்கள் வாசித்துள்ளனர்.