இ.எம்.எஸ்ஸின் வளர்ச்சிக் கனவுகளை கேரளம் நனவாக்குகிறது
மலப்புரத்தின் கரத்தூரில் ‘இ.எம்.எஸ் உலகம்’ கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதனை சிபிஎம் கேரள மாநிலச் செயலாளரும் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான எம்.வி. கோவிந்தன் துவங்கி வைத்தார். இ.எம்.எஸ் கனவு கண்ட புதிய கேரளாவை நோக்கி கேரளம் இப்போது அடியெடுத்து வைக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் விஜூ கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.