வெள்ளத்தில் மிதக்கும் குஜராத்
கேரளா, கர்நாடகா மாநிலங்க ளைப் போல குஜராத் மாநிலத் திலும் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந் துள்ளது. மாநிலத் தின் பல்வேறு பகுதிக ளில் வெள்ளம் கரை புரண்டோடி வருவ தால் அம்மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளது. பலத்த மழை காரணமாக தல்க ஜர்த்தா பகுதியில் இடுப்பளவுக்கு மேல் வெள்ள நீரில் தேங்கியுள்ளது. வெள்ளக் காடாக மாறிய அப்பகுதியிலிருந்து 38 பள்ளி மாணவர்களை மீட்பு குழுவினர் படகு மூலம் மீட்டனர். குறிப்பாக மகு வாவில் இருந்து தல்கஜர்த்தாவிற்கு செல்லும் சாலை வெள்ள நீரால் முற்றி லுமாக துண்டிக்கப்பட்டது. அம்ரேலி மாவட்டம் ராஜுலா தாலு காவிலுள்ள கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கி தவித்த 22 பேரை கடலோர காவல் படையினர் மீட்டனர். அதே போல அம்ரே லியிலிருந்து கரியாதார் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து போரிக்காடா என்ற கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கி யது. நல்வாய்ப்பாக பேருந்தில் பயணித்த 20 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். பாவ் நகரில் வெளுத்து வாங்கிய கன மழையால் அணை நிரம்பி வெளியேற் றப்பட்ட உபரி நீர் காட்டாறாக பாய்ந்து வரு கிறது. அம்ரேலி மாவட்டம் ரெஜுலாவில் பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ள நீர் அதிகளவில் பாய்ந்து வருகிறது. இத னால் சுற்றுவட்டார கிராமங்கள் வெள்ளத் தில் தத்தளித்து வருகின்றன.