‘கார்ப்பரேட் ஆதரவு பட்ஜெட்’
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி., சந்தோஷ் குமார் நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஆற்றிய உரையில்,“ஒன்றிய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் ‘கார்ப்பரேட் ஆதரவு பட்ஜெட்’ ஆகும். இதில் சாதா ரண மனிதன் கொண் டாடுவதற்கு எது வுமே இல்லை. குறிப் பாக பட்ஜெட்டில் கேரளம் மீண்டும் ஒருமுறை கொடூரமா கப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. நாங்கள் (கேரளம்) 29 கோரிக்கைகளை முன் வைத்து, ஒரு விரிவான தொகுப்பை சமர்பித்தோம். அதே போல நியாயமான கோரிக்கைகள் அடங்கிய விரிவான மனு ஒன்றும் அளிக்கப்பட்டது. ஆனால், எதையுமே ஒன்றிய அரசு ஏற்கவில்லை. அதே போல கேரளாவிற்கு எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் அதிவேக வழித்தடம் போன்ற கோரிக்கைகள் நிரா கரிக்கப்பட்டுள்ளது. கேரளா இந்தியா வின் ஒரு பகுதி இல்லையா? ஒன்றிய அரசாங்கத்திடமிருந்து கேரளம் தாராள மனப்பான்மையையோ அல்லது கூடுதல் பணத்தையோ எதிர்பார்க்கவி
