கோழிக்கோடு அருகே சீன சரக்குக் கப்பலில் தீப்பிடித்தது
22 கண்டெய்னர்கள் கடலில் விழுந்தன
கோழிக்கோடு கடற்கரை க்கு அருகே கொழும்பிலி ருந்து மும்பைக்குச் சென்று கொண்டிருந்த சீன சரக்குக் கப்ப லில் தீப்பிடித்தது. அதில் 22 பணியாளர் கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. 22 கண் டெய்னர்கள் கடலில் விழுந்துள்ளன. சீன கொள்கலன் கப்பலான வான் ஹையில், பேப்பூர் மற்றும் ஆழிக்கல் துறைமுகங்களுக்கு இடையே இந்த விபத்து ஏற்பட்டது. அரபிக் கடலில், பேப்பூர் நகருக்கு மேற்கே 70 கடல் மைல் தொலைவிலும், கண்ணூர் எழிமலா நக ருக்கு மேற்கே 40 கடல் மைல் தொலைவி லும் சரக்குக் கப்பல் தீப்பிடித்தது. கடற் படை மற்றும் கடலோர காவல்படை மீட்புப் பணியை மேற்கொண்டன. கட லில் விழுந்த கண்டெய்னர்களில் எந்த ரசாயனங்களும் இல்லை என்பது ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கப்பலில் இருந்து புகை எழுவதைக் கண்ட 18 பணியாளர்கள் கடலில் குதித்த தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் படகுகளில் ஏற்றி அவர்கள் கரைக்குக் கொண்டு வரப்பட்டனர். கப்பலில் 650 கண்டெய்னர்கள் இருப்பதாகவும், அவற்றில் 22 கடலில் விழுந்துள்ளதாக வும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐஎன்எஸ் சூரத், விபத்து நடந்த இடத்திற்கு சென்றுள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு டோனேர் விமானங்களும் புறப்பட்டுச் சென்றன. சிங்கப்பூர் கொடி யுடன் கூடிய எம்.வி. வான் ஹை 503 என்ற கண்டெய்னர்கள் கப்பல் 270 மீட்டர் நீள முள்ளதாகும். இந்த கப்பல் 20 ஆண்டு கள் பழமையானது என்று கூறப்படு கிறது. மும்பையில் உள்ள கடல்சார் செயல்பாட்டு மையம், கொச்சியில் உள்ள தனது சக ஊழியர்களுக்கு காலை 10.30 மணியளவில் தீ விபத்து குறித்து முதலில் தகவல் அளித்தது. அதைத் தொடர்ந்து, கொச்சியில் நங்கூரமிட திட்டமிடப்பட்டி ருந்த ஐ.என்.எஸ் சூரத், அவசர உதவி வழங்குவதற்காக விபத்து நடந்த இடத்திற்கு திருப்பி விடப்பட்டது. ஐ.என்.எஸ் கருடா காலை 11 மணிக்கு கப்பலை மேற்கு கடற்படை கட்டளையின்படி, அனுப்பிய தாக பாதுகாப்புப் படையின் பி.ஆர்.ஓ. தெரிவித்தார். நிலைமையை மதிப்பிடுவ தற்கும் மீட்பு நடவடிக்கையை ஒருங்கி ணைப்பதற்கும் கொச்சியில் உள்ள கடற் படை விமான தளமான ஐ.என்.எஸ் கருடா விலிருந்து கடற்படை டோர்னியர் விமா னம் புறப்படும். சீனக் கப்பல் ஜூன் 7 ஆம் தேதி கொழும்பிலிருந்து புறப்பட்டது. ஜூன் 10 ஆம் தேதி மும்பையை அடை யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. விபத்துக்குள்ளான கப்பலில் இந்தி யர்கள் யாரும் இல்லை. கப்பலில் சீனா, மியான்மர், தாய்லாந்து மற்றும் இந்தோ னேசியாவைச் சேர்ந்த பணியாளர்கள் இருந்தனர். பலர் தீக்காயங்களுக்கு ஆளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச் சையை உறுதி செய்ய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.