states

img

மணிப்பூரில் ஆட்சி அமைக்க பாஜக சூழ்ச்சி மீண்டும் வெடித்தது வன்முறை

மணிப்பூரில் ஆட்சி அமைக்க பாஜக சூழ்ச்சி மீண்டும் வெடித்தது வன்முறை

மணிப்பூர் மாநிலத்தில் பாஜக அரசின் மோசமான நிர்வாகத்தின்  காரணமாக  மீண்டும் அங்கு வன் முறை வெடித்துள்ளது. அம்மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக ஆலோசனை நடத்திய சில தினங்களில் இந்த வன்முறை வெடித்துள்ளது.  பாஜக ஆட்சி நடைபெற்ற மணிப்பூ ரில் மெய்டெய் இன மக்களுக்கும் குக்கி இன மக்களுக்கும் இடையே கடந்த 2023ஆம் ஆண்டு பல்வேறு இடங்களில் மோதல் வன்முறை வெடித்தது. இதில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.ஆயிரக்கணக்கனோர் வீடுகளை இழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக உள்ளனர்.  இந்த வன்முறைக்கு எதிராகவும் பாஜக அரசின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு எதிராகவும் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் பாஜகவைச் சேர்ந்த பைரன் சிங் முதலமைச்சர் பத வியை ராஜினாமா செய்தார். தற்போது அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமலில் உள்ளது. இந்த நிலையில், சுராசந்த்பூர் மாவட் டத்தின் எல்லையை ஒட்டி உள்ள பகுதிகளுக்கு அருகில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். வன்முறை நிகழ்ந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர், ஒரு பிரிவினர் முகாம்களில் இருந்து தங்களது வீடுகளுக்கு திரும்பிய மறுநாள் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதனை தடுக்க முயன்ற போது, பாதுகாப்புப் படை யைச் சேர்ந்த சிலர் படுகாயம் அடைந்த தாகக் கூறப்படுகிறது. மணிப்பூரில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் விதமாக தில்லியில் ஆலோசனை நடத்திய 2 நாட்களில் இந்த வன்முறை ஏற் பட்டுள்ளது. இதனிடையே மணிப்பூர் வன்முறை தொடர்பான விசாரணை ஆணை யத்தின் பதவிக்காலம் 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  2026 மே 20  க்குள் அறிக்கை தர வேண்டும் என்று விசாரணை ஆணையத்துக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. முன்னதாக ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் லம்பா தலைமையில் மணிப்பூர் கலவரம் தொடர்பாக விசாரிக்க 2023 இல் விசாரணை ஆணையம் அமைக் கப்பட்டது.  விசாரணை ஆணையத்துக்கு இதுவரை 4 முறை கால அவகாசத்தை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.