மும்பை ரயில் குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட 12 பேரும் விடுதலை
போலிக் குற்றச்சாட்டால் 19 ஆண்டு சிறை
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை புறநகர் ரயில்களில் 2006ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தில் அப்பாவி பொதுமக்கள் 189 பேர் உயிரிழந்தனர் ; 820 பேர் படுகாயம டைந்தனர். இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கு “லஷ்கர் இ தொய்பா” பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான “லஷ்கர் இ குவாகர்” பொறுப்பேற்றது. மேலும் குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக கமல் அன்சாரி, முகமது பைசல், குத்புதின் சித்திக், நவீத் ஹசன் கான், ஆசீப் கான், தன்வீர் அகமது, முகமது மஜித், ஷேக் முகமது அலி, முகமது சஜித், ரகுமான் ஷேக், ஷாகில் முகமது, சமீர் அகமது ஆகிய 12 பேர் கைது செய்யப் பட்டனர்.
தூக்கு தண்டனை
இதுதொடர்பான வழக்கு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரும் குற்றவாளிகள் என்றும், அதில் 5 பேருக்கு தூக்குத் தண்டனையும், எஞ்சிய 7 பேருக்கு ஆயுள் தண்ட னையும் விதித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் 2015ஆம் ஆண்டு தீர்ப்ப ளித்தது. குற்றவாளிகள் அனைவரும் மகாராஷ்டிராவின் பல்வேறு சிறைக ளில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, தங்களுக்கு விதிக் கப்பட்ட தண்டனையை ரத்து செய் யக்கோரி 12 பேரும் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த னர். இதனிடையே குற்றவாளி என அறிவிக்கப்பட்ட கமல் அன்சாரி கடந்த 2021ஆம் தேதி கொரோனா வால் நாக்பூர் சிறையில் உயிரி ழந்தார்.
நீதிபதிகள் காட்டம்
இந்நிலையில், மும்பை ரயில் குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர் பாக தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு திங்களன்று மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனில் கிளோர், ஷியாம் சந்தக் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதத்திற்கு பின்பு உயர்நீதிமன்ற நீதிபதிகள்,”12 பேர் மீதான குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு நிரூபிக்கவில்லை. நியாயமான சந்தேகங்களுக்கு விளக்கமளித்து வழக்கை நிறுவுவதில் அரசு தரப்பு முற்றிலும் தோல்வியடைந்து விட்டது” எனக் கூறி, வழக்கில் தண் டனை பெற்ற 12 பேரையும் (தற்போது 11 பேர்) விடுதலை செய்து உத்தர விட்டனர். எனினும் உயர்நீதிமன்ற உத்த ரவை எதிர்த்து, மகாராஷ்டிரா அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக செய்திகள் வெளி யாகியுள்ளன.