states

img

தொழில்நுட்ப கோளாறால் அகமதாபாத்-லண்டன் விமானம் ரத்து

தொழில்நுட்ப கோளாறால் அகமதாபாத்-லண்டன் விமானம் ரத்து

மீண்டும் பரபரப்பு

மீண்டும் பரபரப்பு தொழில்நுட்ப கோளாறால் அகமதாபாத்-லண்டன் விமானம் ரத்து குஜராத் மாநிலம் அகமதாபாத் தில் ஏர் இந்தியாவுக்கு சொந்த மான விமானம் ஜூன் 12ஆம் தேதி விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்தில் 270க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று விபத்துக்குள்ளான விமானம் பய ணித்த அதே வழித்தடத்தில் செல்ல இருந்த மற்றொரு ஏர் இந்தியா (ஏஐ-159) விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து விமானம் ரத்து செய்யப்பட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்தது. கடைசி நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டு ரத்து செய்யப்பட்டதால் 241 பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதுகுறித்து பயணி ஒருவர் கூறுகை யில்,”ஏர் இந்தியாவின் ஏஐ 159 விமானம் பிற்பகல் 1.10 மணிக்கு புறப்படுவதாக இருந்தது. ஆனால் மூன்று மணிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அறி வித்தனர். ஆனால் அடுத்த சில நிமிடங்க ளில், அதாவது 1.45 மணிக்கு விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ள னர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டதாக எதுவும் கூறப்படவில்லை” என அவர் கூறினார். கொல்கத்தா : நூலிழையில் தப்பிய பயணிகள் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ வில் இருந்து கொல்கத்தா வழியாக மும்பை நோக்கி வந்துகொண்டிருந்த ஏர்  இந்தியா விமானத்தின் எஞ்சினில் பழுது ஏற்பட்டது. விமானத்தின் 2 எஞ்சின்களில் ஒன்றில் பழுது ஏற்பட்டதை விமானி கண்டு பிடித்தார். பழுது ஏற்பட்டாலும் விமானி யின் சாமர்த்தியத்தால் திட்டமிட்ட நேர மான நள்ளிரவு 12.45க்கு கொல்கத்தா விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறக்கப்பட்டது. பாரீஸ் : ஏர் இந்தியா தில்லியிலிருந்து பாரீஸ் புறப்பட விருந்த “ஏர் இந்தியாவின் ட்ரீம்லைனர் ஏஐ143 விமானம்” செவ்வாய்க்கிழமை அன்று திடீரென ரத்து செய்யப்பட்டது. பராமரிப்புப் பணிகளின் போது கோளாறு இருப்பது தெரிய வந்ததாக வும், இதன் காரணமாக அந்த விமானம் ரத்து செய்யப்படுவதாகவும் ஏர் இந்தியா  அறிவித்துள்ளது.