கூட்ட நெரிசலால் ரயிலில் இருந்து தவறி விழுந்த 5 பேர் பலி 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பைக்கு இயக்கப்படும் புறநகர் ரயில்களில் நாள் தோறும் லட்சக்கணக்கானோர் பய ணித்து வருகின்றனர். காலை மற்றும் மாலை நேரங் களில் கூட்டநெரிசல் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், திங்களன்று காலை தானே ரயில் நிலையத்தில் இருந்து மும்பை ரயில் நிலையத்துக்கு புறநகர் ரயில் சென்றுகொண்டி ருந்தது. அதிக கூட்டம் காரணமாக ரயிலில் படிக்கட்டுகளில் அதிகளவிலான பயணிகள் தொங்கியபடி பயணித்துள்ளனர். தானேவை அடுத்த மும்ப்ரா ரயில் நிலையம் அருகே காலை 9:30 மணியளவில் திவா மற்றும் கோபர் ரயில் நிலையங்களுக்கு இடையே, கசாரா நோக்கிச் சென்று கொண்டிருந்த புறநகர் ரயிலில் படிக்கட்டுகளில் தொங்கிய 10-க்கும் மேற்பட்டோர் தவறி கீழே விழுந்துள்ளனர். ரயில் அதிவேகமாகச் சென்று கொண்டு இருந்ததால், கீழே விழுந்தவர்கள் பலத்த காயமடைந்தனர். இந்த கோர விபத்தில் சிக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயம டைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிட மாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ரயில்கள் மோதலா? இந்நிலையில் கசாரா நோக்கிச் சென்று கொண்டிருந்த புறநகர் ரயிலுடன், சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் மோதியதே விபத்துக்கு காரணம் ஆகும் என செய்திகள் வெளியாகி யுள்ளன.
51,802 பேர் பலி
மும்பையைச் சார்ந்த மேற்கு ரயில்வே மண்டலத்தில் மொத்தம் 1,394 புறநகர் ரயில் நிலையங் கள் உள்ளன. அவற்றில் நாள் ஒன்றுக்கு 35 லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர். அதே போல மத்திய ரயில்வே மண்டலத்தில் 1,810 புறநகர் ரயில் நிலையங்களும், அவற்றில் நாள் ஒன்றுக்கு 40 லட்சம் பயணி களும் ரயில் சேவைகளை பயன்படுத்து கின்றனர். இந்நிலையில் ரயில்வே அளித்த தகவ லின்படி, கடந்த 2005ஆம் ஆண்டு முதல் கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை வரையி லான 19 ஆண்டு காலகட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51,802 ஆக உள்ளது. அவற்றுள் மேற்கு ரயில்வே மண்டலத்தில் 22,481 மரணங்க ளும், மத்திய ரயில்வே மண்டலத்தில் 29,321 மரணங்களும் நிகழ்ந்துள்ளன.