states

img

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்வு 

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது. 

பீகாரில் கடந்த 2016ம் ஆண்டு முதல் மதுவிலக்கு கொள்கை அமலில் உள்ளது. ஆனால் அங்குள்ள கிராமங்களில் கள்ளச்சாராய விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பீகாரின் சப்ரா மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் கள்ளச்சாரயம் குடித்தவர்கள் நூற்றுக்கணக்கானோர் அடுத்தடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதில் தற்போது வரை 81 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.