states

img

ஆந்திராவிற்கு புதிய தலைநகர்!

வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆந்திராவின் புதிய தலைநகராக விசாகப்பட்டினம் செயல்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஆந்திராவிலிருந்து கடந்த 2014-இல் தெலங்கானா தனி மாநிலமாக பிரிந்ததை அடுத்து தெலங்கானாவின் தலைநகராக ஐதரபாத் மாறியது. ஆந்திராவுக்கு புதிய தலைநகரை உருவாக்க வேண்டிய சூழல் ஏற்பட்ட நிலையில், அமராவதி தலைநகராக அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில், இந்த ஆண்டு செப்டம்பர் முதல் மாநிலத்தின் நிர்வாக ரீதியிலான தலைநகராக விசாகப்பட்டினம் செயல்படும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.