states

சேரில் அமர்ந்து இராமாயணம் பார்த்ததால் தாக்குதல்

லக்னோ, அக்.12- உத்தரப்பிரதேச மாநிலத்  தில் நவராத்திரியை முன் னிட்டு நடந்த ராம்லீலா நாட கத்தை, நாற்காலியில் உட் கார்ந்து பார்த்ததற்காக, போலீசார் நடத்திய சாதி வெறித் தாக்குதலால், அவ மானம் அடைந்த தலித் ஒரு வர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உ.பி. மாநிலம் காஸ் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள  சலேம்பூர் கிராமத்தில் கடந்த  ஞாயிற்றுக்கிழமை இரவு நவராத்திரி விழாவை முன்  னிட்டு இராமாயண புராணக்  கதைகளைக் கூறும் ராம்  லீலா நாடக நிகழ்ச்சி நடந்துள்ளது.

இந்த நாடகத்தைப் பார்க்க ஆவூரைச் சேர்ந்த  சந்த் (48) வந்துள்ளார்.  அங்கு காலியாக கிடந்த நாற்  காலி ஒன்றில் அமர்ந்து நாட கம் பார்த்துள்ளார். அப்  போது, தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நாற்காலி யில் உட்கார்ந்து இராமாயண  நாடகத்தைப் பார்ப்பதா, என்று சாதிவெறி கொண்ட  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பா ளர்கள் பாதுகாப்புக்கு வந்த  காவல்துறையினர் சிலரை ஏவி சந்த்-ஐ தாக்கியுள்ளனர். காவல்துறையினரும் சந்த்-இன் கழுத்தில் இருந்த துண்  டைப் பிடித்து இழுத்து சேரில் இருந்து கீழே தள்ளி சாதிப்  பெயரைச் சொல்லி தாக்கியுள்ளனர்

இதனால் சந்த் அழுது கொண்டே, நாடகம் பார்க்க வந்தவர்களிடம் தான் செய்த  தவறு என்ன, என்று கேட்டுள்  ளார். பின் அங்கிருந்து தனது வீட்டுக்கு வந்த சந்த்  தனது மனைவி ராம் ரதியிடம்  நடந்ததைக் கூறியுள்ளார்.

மறுநாள் காலையில் எழுந்து பார்க்கும்போது சந்த்  வீட்டுக்குள் தூக்கில் பிண மாக தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இது அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. விவசாய வேலை செய்துவந்த சந்த்,  அதன்மூலமாகவே தனது மனைவி மற்றும் 4 குழந்தை களை காப்பாற்றி வந்தார். தற்போது அவரது குடும்பம் நிர்க்கதி ஆகியுள்ளது.