ராஜஸ்தானின் சிறைகளில் உள்ள 290 கைதிகளுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ராஜஸ்தானில் மாநில சிறைகளில் உள்ள கைதிகள் மனநலம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துவந்தது. இந்நிலையில் மாநிலத்தின் பல்வேறு சிறைகளில் உள்ள 290 கைதிகளுக்கு மன நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சிறைத்துறை அமைச்சர் டிகரம் ஜூலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த டிகரம் ஜூலி ஜனவரி 21,2022 நிலவரப்படி ராஜஸ்தானின் 6 மத்திய சிறைகள், 19 மாவட்ட சிறைகள், 31 துணை சிறைகளில் உள்ள 443 கைதிகள் பல நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 290 கைதிகள் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.