டாக்கா,ஆக.5- வங்கதேச அரசை அந்நாட்டு ராணு வம் கைப்பற்றியுள்ளது. மேலும், பிர தமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து விட்டதாகவும், இடைக்கால அரசாக ராணுவம் செயல்படும் என்றும் புதிய அரசை அமைக்க ராணுவம் உதவும் எனவும் ராணுவத் தளபதி வாக்கர் உஸ் ஜமான் தெரிவித்துள்ளார்.
நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவழியாக இங்கி லாந்திற்கு செல்வதாக கூறப்பட்டது. இந்தியாவின் அகர்தலா விமான நிலை யத்திற்கு வந்த அவர் தில்லி வழி யாக இங்கிலாந்து செல்வதாக கூறப் பட்டது. எனினும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
கலவரமாக மாறிய போராட்டம்
வங்கதேச சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப் பட்டு வரும் 30 சதவீத இடஒதுக்கீட்டு முறைக்கு எதிராக 2024 ஜூலை இறுதியில் பெரும் போராட்டம் நடை பெற்றது. இந்த போராட்டத்தில் உரு வாக்கப்பட்ட கலவரத்தில் கிட்டத்தட்ட 200 பேர் கொல்லப்பட்டனர். போராட் டத்தைத் தொடர்ந்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீட்டு முறையில் மாற்றத்தை கொண்டு வந்தது. 93 சதவீத இடங்கள் திறமையின் அடிப் படையில் நிரப்பப்படும் எனவும் அறி வித்தது.
உச்ச நீதிமன்ற அறிவிப்பு வந்து 2 வாரங்களில் ஆகஸ்ட் 4 அன்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் போராட் டம் வெடித்தது. மாணவர்களின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக் கொண்ட பிறகும் அவர்கள் போராடு வது ஹசீனா அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் இந்த கலவரம் மாணவர்களால் நடத்தப் படவில்லை; நாட்டில் உள்ள பிரிவினை வாதிகளால் தூண்டிவிடப்பட்டுள்ளது; இது நாட்டின் பொருளாதார, அர சியல் சூழலை வைத்து தூண்டிவிடப் பட்டுள்ள கலவரம் என பிரதமர் ஷேக் ஹசீனா கண்டனம் தெரிவித்தார்.
மாணவர்கள் நடத்திய நியாய மான போராட்டங்களில், தடை செய்யப் பட்ட ஜமாத்-இ-இஸ்லாமி போன்ற பயங்கரவாதக்குழுக்களுடன் பேகம் கலிதா ஜியாவின் வங்கதேச தேசிய கட்சி (பி.என்.பி ) உள்ளிட்ட எதிர்க்கட்சி கள் இணைந்து இந்த கலவரத்தை உரு வாக்கியுள்ளனர் என பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த வாரமே குறிப்பிட்டார்.
“மாணவர்களை நாங்கள் பயங்கரவாதிகள், வன்முறையாளர் கள் என குறிப்பிடவில்லை. மாண வர்களின் போராட்டத்தில் ஊடுருவி கலவரத்தை துவங்கியது மூன்றாம் தரப்பு நபர்கள். மாணவர்களின் போராட்டத்தை அவர்களின் சுய லா பத்திற்காகவும் அரசை கவிழ்க்கவும் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்” என அந்நாட்டின் தகவல் தொழில் நுட்ப அமைச்சர் முகமது அராபத் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவம்
இந்நிலையில் கலவரத்தில் 200 க்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டதற்கு பொறுப்பேற்று பிரதமர் ஷேக் ஹசீனா பதவி வலக வேண்டும் என ஒற்றைக்கோரிக்கையை முன் வைத்து ஆகஸ்ட் 4 ஞாயிறன்று மீண்டும் பெரும் போராட்டத்தை ஹசீனா குறிப்பிட்ட எதிர்க்கட்சியினர் நடத்தினர். இதற்கு ஹசீனாவின் அவாமிலீக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மீண்டும் கலவரம் வெடித்தது.
இந்த மோதலில் ஞாயிறன்று ஒரே நாளில் கிட்டத் தட்ட 100 பேர் பலியா கினர். இவர்களில் 14 க்கும் மேற்பட்ட போலீசார் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் வங்கதேச தொழி லாளர் கட்சியும் (WPB), கம்யூ னிஸ்ட் கட்சியும் (CPB) ஞாயிற்றுக்கிழ மையன்றே வன்முறையாளர்களுக்கு எதிராக கண்டனங்களை தெரி வித்தன.
ராணுவத்தின் கையில் ....
இந்நிலையில் திடீரென திங்க ளன்று பிரதமர் ஹசீனா பதவி விலகி விட்டார் எனவும் ராணுவம் இனி ஆட்சி நடத்தும் எனவும் புதிய ஆட்சி அமைக்க ராணுவம் உதவும் எனவும் ராணுவத் தளபதி வாக்கர் அரசாங்க தொலைக் காட்சி நேரலையில் தெரிவித்துள் ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. . முன்னதாக ஹசீனாவின் அரசு இல்லத்தில் புகுந்த கலவரக் காரர்கள் அவரது உடைமைகள் மற் றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
கடந்த ஆண்டே எச்சரித்த தொழிலாளர் கட்சி
2023 செப்டம்பர் மாதமே வங்கதேச தொழிலாளர் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான ரஷேத் கான் மேனன் நாடாளுமன்றத்தில் பேசிய போது, வங்கதேச செயின்ட் மார்ட்டின் தீவில் நிரந்தர ராணுவ தளத்தை உரு வாக்கிட அமெரிக்கா விரும்புவதாக அதிர்ச்சித் தகவலை கூறினார். அதனைத் தொடர்ந்தே அமெரிக்கா உருவாக்கியுள்ள குவாட் (QUAD) உள்ளிட்ட அதன் பிற இராணுவக் கூட்டணிகளில் சேருமாறு வங்கதேசத்துக்கு அழுத்தத்தை உருவாக்கியது எனவும் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் உத்தரவுக்கு வங்கதேசம் பணியாத நிலையில், பிற நாடுகளில் செய்வதைப் போலவே அமெரிக்கா வங்கதேசத்தின் உள் நாட்டு அரசியலுக்குள் புகுந்து நாட்டில் ஜனநாயகம் இல்லை, தேர்தலில் மோசடி என கலகம் செய்து வந்தது. ரஷேத் கான் எம்.பி. பேசிய அதே கூட்டத்தொடரில் பிரதமர் ஷேக் ஹசீனா, வங்கதேசத்தின் மீது அமெரிக்கா செலுத்தி வரும் அழுத் தங்களைக் குறிப்பிட்டு கவலை தெரி வித்தார்.
தீவிர வலதுசாரிகளுக்கு வாய்ப்பைக் கொடுத்த அவாமி லீக்
உலகம் முழுவதும் அமலாக்கப் பட்டுள்ள நவீன தாராளமயப் பொருளாதார கொள்கைகளும் அவற்றால் ஏற்பட்டுள்ள மோசமான விளைவுகளும் பல நாடுகளில் போராட்ட அலையைத் தோற்றுவித் துள்ளது. வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆளும் அவாமி லீக் ஆட்சி பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்யவில்லை; இளைஞர்கள் எதிர் கொண்டுவரும் தீவிர வேலையின்மை, மோசமான உள்கட்டமைப்பு மேம்பாடு, விலைவாசி உயர்வு , பணவீக்கம், ஊழல், மோசமான சுகாதார கட்டமைப்பு ஆகியவை மக்களின் நம்பிக்கை இழக்க கார ணமாக அமைந்தது. இதனை பயன் படுத்திக்கொண்ட எதிர்க்கட்சிகளும் ஏகாதிபத்திய சக்திகளும் கூட்டுச் சேர்ந்து ஹசீனாவின் ஆட்சியை கவிழ்த்துள்ளனர் என்பதே உண்மை.