மும்பை, செப்., 01- மகாராஷ்டிராவின் பால்கரில் உள்ள வத்வான் ராஜ்கோட் கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த ஆண்டு கடற்படை தினத்தன்று (டிச.4) திறந்து வைக்கப்பட்ட 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி வெண்கலச் சிலை திங்களன்று (ஆக.26) மதியம் 1 மணியளவில் இடிந்து விழுந்தது.
பாஜக கூட்டணி ஆட்சியின் ஊழல் காரணமாகவே சிவாஜி சிலை உடைந்தததாக காங்கிரஸ், சிவசேனா (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட “இந்தியா” கூட்டணிக் கட்சி கள் போர்க்கொடி தூக்கின. மேலும் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக போராட்டம் நடை பெற்றதாலும், மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற வுள்ளதை கருத்தில் கொண்டும் சிவாஜி சிலை உடைந்ததற்காக சிவாஜியிடம் மன்னிப்பு கேட்பதாக பிரதமர் மோடி வழக்கமான தேர்தல் நாடகத்தை அரங்கேற்றினார். எனினும் மோடி யின் மன்னிப்பை புறம் தள்ளி மகாராஷ்டிராவில் பாஜகவிற்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் சிந்துர்துர்க் மாவட்டத்தில் சத்ரபதி சிவாஜி சிலை உடைந்து விழுந்ததைக் கண்டித்து எதிர்க்கட்சி களின் “மகா விகாஸ் அகாதி கூட்டணி (எம்விஏ)” தலைவர்கள் ஞாயிறன்று “சப்பல் ஜோட் மாரோ யாத்ரா” (காலணிகளால் அடிக்கும் யாத்திரை)” என்ற பெயரில் பேரணி நடத்தினர். வரலாற்று சிறப்புமிக்க ஹுதாத்மா சவுக்கில் இருந்து கேட்வே ஆப் இந்தியா வரை சென்ற இந்த பேரணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் நானா படோலே பேரணியில் கலந்து கொண்ட நிலையில், எதிர்க்கட்சித் தொண்டர்கள் அரசைக் கண்டித்து கைகளில் காலணிகளுடன் பேரணியில் கலந்துகொண்ட னர்.
பிரதமர் மோடியின் ஆணவத்திற்கு விழுந்த அடி
தொடர்ந்து இந்தியா கேட் பகுதியில் நடை பெற்ற பொதுக் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பேசுகையில், “பிரதமர் மோடி அவர்களே, உங்கள் மன்னிப்பில் இடிந்து விழுந்த ஆணவத்தை கவனித்தீர்களா? கீர்த்தி மிகுந்த, வீரம் நிறைந்த மன்னர் அவமதிக்கப் பட்டிருப்பதை மகாராஷ்டிரா மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். ராமர் கோவில் மற்றும் புதிய நாடாளுமன்றத்தின் கூரைகள் ஒழுகுவது மோடியின் பொய்யான உத்தரவாதத்துக்கு உதா ரணங்கள். பிரதமர் எதற்காக மன்னிப்புக் கேட்டார்? 8 மாதங்களுக்கு முன்பு அவர் அந்த சிலையைத் திறந்து வைத்ததற்காகவா? அதில் நடந்துள்ள ஊழலுக்காகவா? சிவாஜியை அவ மதித்த சக்திகளை எம்விஏ கூட்டணி ஒன்றி ணைந்து தோற்கடிக்க வேண்டும்” எனக் கூறினார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேசுகையில்,”சிந்துர்துர்க்கில் இருந்த சிவாஜி மகாராஜாவின் சிலை இடிந்தது ஊழலுக்கான உதாரணம்” என கூறினார். அதேபோல் சிவாஜி பேரரசரின் வம்சாவளியும், கோல்ஹாபூர் காங்கிரஸ் எம்.பி.யுமான சாஹு சத்ரபதி, “என்ன விலை கொடுத்தாகிலும் சிவாஜியின் மரியாதை காப்பாற்றப்பட வேண்டும்” எனக் கூறினார்.