போபால் அக். 3 முதல் 11ஆம் தேதி வரை நாடு முழுவதும் நவ ராத்திரி பண்டிகை கொண் டாடப்பட உள்ள நிலையில், மத்தியப்பிரதேசத்தில் உள்ள இந்தூரில் பாஜக சார்பில் நவராத்திரி விழா வுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. விழா அறி விப்பின் பொழுது இந்தூர் மாவட்ட பாஜக தலைவர் சிந்து வர்மா,”கர்பா நிகழ்ச்சி நடக்கும் இடத்தி ற்குக் கோமியம் குடிக்கும் மக்களை மட்டுமே அனு மதிக்க வேண்டும். இந்து வாக இருக்கும் யாரும் கோமியம் குடிப்பதை எதிர்க்க மாட்டார்கள். அத னால் தான் நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் மக் களை அனுமதிக்கும் முன், அவர்கள் கோமியத்தைக் குடிப்பதை உறுதி செய்யு மாறு கேட்டுக் கொண்டுள் ளோம். சிலர் ஆதார் அட்டை யைக் கூட திருத்தி விழா விற்கு வருகிறார்கள். அத னால் தான் இந்த அறிவி ப்பு” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அதே நேரம் வர்மாவின் இந்த உத்தரவுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து ள்ளது.”தேவையில்லாமல் நவராத்திரி பண்டிகையை வைத்து அரசியல் செய்ய முயல்வதாகவும் சமூகத் தில் பிளவை ஏற்படுத்த பாஜக போடும் திட்டம் தானே தவிர வேறு எதுவும் இல்லை” என காங்கி ரஸ் சாடியுள்ளது.