பாஜகவின் வகுப்புவாத அரசி யலால் வடகிழக்கு மாநிலங்க ளில் ஒன்றான மணிப்பூர் கடந்த 10 மாதங்களாக பற்றி எரிந்து வரு கிறது. வன்முறைக்கு பலியானோர் எண் ணிக்கை 200-யை கடந்துள்ள நிலையில், கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி இம்பால் கிழக்கு மாவட்ட பகுதியின் முக்கிய தன் னார்வலராக இருக்கும் நிங்தௌஜம் மணிசனா (35) காணாமல் போனார். பாது காப்புப் படையினர் மற்றும் உள்ளூர் கிராமவாசிகள் கடந்த 4 நாட்களாக தேடி வந்த நிலையில், காங்போக்பி மாவட்டத் தில் உள்ள மோல்ஹாம் கிராமத்தில் மணி சனா துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலை யில் சடலமாக மீட்கப்பட்டார்.
இம்பால் கிழக்கு பகுதிகளில் பதற்றம்
துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட குக்கி பழங்குடியின பிரிவைச் சேர்ந்த நிங்தௌஜம் மணிசனா இம்பால் கிழக்கு மாவட்டத்தின் முக்கிய தன் னார்வலராக இருந்து வந்தார். முக்கிய மாக இம்பால் கிழக்கு மாவட்டத்தில் பதற்ற நிலையை தவிர்க்க பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வந்தார். மொய் ராங்புரேல் பகுதியில் நடந்த மோதலுக் குப் பின்னர்தான் மணிசனா காணாமல் போனார் என்பதால் மெய்டெய் பிரிவைச் சேர்ந்த வன்முறை கும்பல் கடத்தி கொலை செய்து இருக்கலாம் என தக வல் வெளியாகியுள்ளது. தங்கள் பிரி வைச் சேர்ந்த தலைவரை மெய்டெய் கும்பல் சுட்டுக் கொன்று இருப்பதால், இம்பால் கிழக்கு பகுதிகளில் குக்கி - மெய்டெய் பிரிவுகளுக்கு இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது என தக வல் வெளியாகியுள்ளது.