பாஜகவின் இழிவான அரசிய லால் கடந்த 9 மாதங்களாக வன்முறை பூமியாக காட்சி அளித்து வருகிறது மணிப்பூர் மாநிலம். இம்மாநிலத்தின் தெற்கு பகுதியான மியான்மர் எல்லைப் பகுதியில் பாது காப்புப் பணியில் ஈடுபட்டு வரும் அசாம் ரைபிள் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர் ஒரு வர் புதனன்று காலை திடீரென தனது துப்பாக்கி மூலம் சகவீரர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டார். இந்த துப் பாக்கிச்சூட்டில் 6 வீரர்கள் படுகாயம டைந்த நிலையில், தாக்குதல் நடத்திய வீரர் தற்கொலை செய்யும் நோக்கத்தில் தன்னை தானே சுட்டுக்கொண்டார்.
படு காயமடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக ராணுவ மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலை யில், துப்பாக்கிச்சூடு நடத்திய வீரர் இறந்து விட்டதாகவும், மற்ற அனைவரும் நலமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட் டுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய வீரர் மணிப்பூரின் சுராசந்த்பூரைச் சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளதால் மணிப்பூர் தெற்கு பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.