மகாராஷ்டிர மாநிலம் சைலனி பாபா தர்காவுக்கு சென்றுவிட்டு 35 பேர் கொண்ட குழு டெம்போ வேனில் நாசிக் நோக்கி திரும்பிக்கொண் டிருந்தனர். சம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள அதிவிரைவு சாலையில் சென்ற பொழுது டெம்போ வேன் கட்டுப்பாட்டை இழந்து கண்டெயினர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத் தில் சம்பவ இடத்திலேயே டெம்போவில் இருந்த 12 பேர் பலியான நிலையில், 23 பேர் காயமடைந்தனர். காயமடைந்த நபர்கள் அருகில் உள்ள மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேடற்கொண்டு வருகின்றனர்.