states

img

ஒன்றுபட்ட போராட்டத்தில் வெற்றி பெற்றது கர்நாடக தகவல் தொழில்நுட்ப சங்கம்

பெங்களூரு, ஜூலை 1- பெங்களூரு எம்பிஎஸ் லிமிடெட் நிறுவனத்தில் அநியாயமாக பணிநீக்கம் செய்யப் பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க  கர்நாடக துணை தொழிலாளர் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.  இது ஒன்றுபட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி  என கர்நாடக தகவல் தொழில்நுட்ப பணி யாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பெங்களூருவிலிருந்து டேராடூன் மற்றும் சென்னைக்கு அநியாயமாக இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக ஐடி/ஐடிஇஎஸ் ஊழியர் சங்கம் (கேஐடியு) தாக்கல் செய்த தொழிலாளர் தகராறு தொழிலாளர் ஆணையரிடம் நிலுவையில் இருந்தபோது நிர்வாகம் காரணமின்றி இரண்டு தொழிலாளர் களை பணிநீக்கம் செய்தது. தொழில் தகராறு சட்டம் பிரிவு 33-இன் கீழ் நிறுவன உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யவும், பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தவும் கோரி தொழிலாளர் துறை யிடம் தொழிற்சங்கம் அளித்த புகாரில் தொழி லாளர்களுக்கு சாதகமான இந்த முடிவு வந்துள்ளது. இதேபோல், 2018 ஆம் ஆண்டில், சுமார் 200 தொழிலாளர்கள் அநியாயமாக டேராடூனுக்கு மாற்றப்பட்டனர். மற்றும் எம்பிஎஸ் லிமிடெட்  நிறுவனத்தில் 10 தொழிலாளர்கள் பணிநீக்கம்  செய்யப்பட்டனர். கேஐடியு சங்கத்தின் எம்பிஎஸ் பிரிவு சங்கம் வலுவான தலையீட்டைத் தொடர்ந்து, பணிநீக்கம் செய்யப்பட்ட தொழி லாளர்களை திரும்பப் பெறவும், சட்டவிரோத இடமாற்றங்களை ரத்து செய்யவும் வேண்டிய கட்டாயம் நிர்வாகத்துக்கு ஏற்பட்டது.