பெங்களூரு “பேராசை கொண்ட பெரும் முதலாளி களே உங்களுக்கு எங்களின் கண்டனங்கள்! பணி நேரத்தை உயர்த்தி எங்கள் உயி ரைக் குடிக்க நினைக்கும் உங்க ளுக்கு எங்கள் கண்டனங்கள்! உங்களிடம் சம்பளம் வாங்குவ தால் நாங்கள் உங்கள் அடிமைகள் அல்ல! எங்களுடைய குரல் உரத்துச் சொல்லும். உங்களுடைய பேராசைக்கு எச்சரிக்கை!”
-இதுவரைக்கும் பொதுச் சமூ கம் நினைத்துக்கூடப் பார்க்காத பன்னாட்டு ஐடி ஊழியர்கள் தான் இப்படி ஆவேச முழக்கமிட்டனர். எல்லோரும் இளம் பொறியாளர் கள் அனைவரது கைகளிலும் - சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் பொறித்த சிஐடியுவின் செங்கொடி பட்டொளி வீசிப் பறந்து கொண்டி ருந்தது.
தகவல் தொழில்நுட்பத் துறை யின் தலைநகரம் என்று சொல்லப் படும் பெங்களூருவின் மைய பகுதி யான ப்ரீடம் பார்க் (freedom park) என்ற பொது இடத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி, ஐநூறுக்கும் மேற்பட்ட பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் ‘KITU’ சங்கத்தின் தலைமையில் ஒன்று கூடி அர சிற்கும், பன்னாட்டுப் பெரும் முத லாளிகளுக்கும் எதிராக கண்டன முழக்கம் இட்டனர்.
14 மணி நேர வேலையா?
கர்நாடக அரசு பன்னாட்டு நிறு வனங்களின் கோரிக்கைக்கு இணங்க வேலை நாளை 14 மணி நேரத்திற்கும் மேலாக கொண்டு செல்ல சட்டம் இயற்ற முயன்ற பின்னணியில் இத்தகைய ஆர்ப் பாட்டம் நடந்துள்ளது. பெங்களூ ரில் உள்ள அனைத்து பெரும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்க ளின் உள்ளும் இது தொடர்பான பிரச்சாரங்கள் நடந்தப்பட்டு இருக் கின்றன.
புதிய தாராளமய கொள்கைகளின் தாக்குதல்
கடந்த ஜூன் 10ஆம் தேதி, கர்நாடக அரசு ஐடி நிறுவனங்கள் உள்ளடக்கிய அறிவு சார் துறை நிறுவனங்களை தொழில் தக ராறு சட்டத்தில் இருந்து மேலும் ஐந்து வருடங்களுக்கு விலக்கு நீட்டிப்பதாக மாநில அரசு அறி விப்பு வெளியிட்டது. நிலுவையில் உள்ள விலக்கு முடியும் தருவாயில் ஐடி ஊழியர்கள் சங்கம் (KITU) நூற்றுக்கணக்கில் பேரணியாக சென்று தொழிலாளர் ஆணையத் தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி, விலக்கை நீடிக்கக் கூடாது என்றும், முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது.
ஐடி நிறுவனங்களில் தொ டர்ந்து வரும் சட்ட விரோத ஆட் குறைப்பு நடவடிக்கைகளும், அதி கரித்து வரும் பாலியல் துன்புறுத் தல் வழக்குகளும், குறைதீர்ப்பு குழுக்களை நிறுவனங்கள் அமைக்காதது போன்றவற்றை எதிர்த்தும் இந்த சட்ட விலக்கை திரும்பப் பெற வலியுறுத்தியும் கர் நாடக மாநில ஐடி மற்றும் ஐடி சார்ந்த ஊழியர்கள் சங்கம் இப் போராட்டத்தை நடத்தியது.
பல்லாயிரம் ஊழியரின் வேலை பறிப்பு
கடந்த ஐந்து ஆண்டுகால சட்ட விலக்கு காலத்தில் பல்லாயிரம் ஊழியர்கள் சட்டத்திற்கு புறம்பாக வேலையிலிருந்து துரத்தப்பட்டுள் ளனர். இந்த தகவல்கள் அனைத் தும் செய்தியாக ஊடகங்களின் வாயிலாக பொதுவெளியில் வந் துள்ளது. இப்படி வெளிப்படை யான சட்ட மீறல்கள் நடந்தும் அவற்றைக் கண்டுகொள்ளாமல், கணக்கில் கொள்ளாமல் அரசு ஒருதலைப்பட்சமாக செயல்படு கிறது. திடீர் மிரட்டல்கள் மூலமாக பேரும் திரளான ஊழியர்கள் வேலையை விட்டு துரத்தப்படும் சூழலில், ஊழியர்களும் அவர்க ளின் குடும்பமும் எதிர்கொள்ளும் மனரீதியான, பொருளாதாரரீதி யான இன்னல்களையும் அரசு அலட்சியப்படுத்திவருகிறது.
இத்தகைய பின்னணியில் தான், கர்நாடக தொழில் முன்னேற்றம் என்ற பெயரில், ஜூலை 20ஆம் தேதி தகவல் தொழில்நுட்ப ஊழியர்க ளின் வேலை நேரத்தை ஒருநாளை க்கு அதிகபட்சமாக 14 மணிநேர மாக உயர்த்துவதற்கு சட்ட வரை வைக் கொண்டுவர முதலாளிகளின் நிர்ப்பந்தம் காரணமாக, கர்நாடக அரசு முயற்சித்தது. இதுதொ டர்பாக, முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த முத்தரப்பு பேச்சு வார்த்தையில் அரசு, ஐ.டி நிறு வனங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊழியர்கள் சங்கமான ‘கிட்டு’ (KITU) பங்கேற்றனர். அரசுத் தரப்பு முன்வைத்த சட்ட வரைவை ஊழி யர்கள் சங்கம் கடுமையாக எதிர் த்து, அதன் எதிர் விளைவுகளையும் முன்வைத்தது. குறிப்பாக 14 மணி நேர வேலை என்பது, ஊழியர்களின் உடல், மன நலன்களுக்கு எதிரானது என்றும், குடும்ப உறவுகளை சீரழிக் கும் என்று முன்வைத்து வாதாடினர். மேலும் வேலைவாய்ப்பைக் குறைக்கும் என்ற அச்சத்தையும் முன்வைத்தனர்.
செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் அதிகரிக்கும் இந்த சூழலில் ஊழியர்களின் சுமையைக் குறைப் பதற்கும், அதன் விளைவாக ஊழி யர்களின் வேலை நேரத்தை குறைப்பதற்கும் திட்டமிடாமல் மேலும் மேலும் வேலைப் பளுவை சுமத்தி ஊழியர்களின் வாழ்நாளைச் சுருக்கும் கொடிய சுரண்டலை, ஊழியர் சங்கம் கடுமையாக சாடியது.
அறிவு சார் நிறுவனங்கள் சில பிரத்தியோக மேலாண்மை உத்தி களை கையாளுகின்றன. குறிப்பாக ஐடி நிறுவனங்களில் திறன் ஆய்வு முறை என்ற பெயரில், ஊழி யர்களின் பணியை ஆண்டுக்கு ஒரு முறை ஆய்வுக்கு உட்படுத்தி அதன் பகுதியாக பதவி உயர்வு, ஊதிய அதிகரிப்பு, வேலை பறிப்பு போன்றவற்றை அமலாக்கு கின்றன. அதே போல் உபரி பணி யாளர் கொள்கை என்ற பெயரில், வேலை நிலைமைகளில் மாற்றம், ஊதியம் குறைப்பு உச்சபட்சமாக வேலை இழப்பும் நடக்கலாம்.
இத்தகைய சட்ட ஒழுங்கற்ற சூழல், கார்ப்பரேட் ஐ.டி நிறுவ னங்கள் தங்களுடைய பெரும் பங்குதாரர்களுக்கு லாபப் பங்கை உயர்த்த வெறித்தனமாக ஊழியர்க ளின் வாழ்க்கையை பலிகொடுக் கின்றன.
இத்தகைய பின்னணியில் தான், சித்தராமையா அரசு முன் மொழிந்த 14மணி நேரவேலைச் சட்ட மசோதா, கடும் எதிர்ப்பை ஐ.டி. ஊழியர்களிடையே ஏற்படுத்தி யுள்ளது.
இது நாடு தழுவிய போராட் டத்திற்கும் வித்திட்டுள்ளது.
பெங்களூரில் எழுச்சி
அதன் ஒரு பகுதியாக பெங்களூ ரில் பெருந்திரள் கண்டன ஆர்ப் பாட்டம் இந்தியாவில் முதல் முறை யாக நடந்தது. இந்த ஆர்ப்பாட் டத்திற்கு சிஐடியு தலைமையிலான ஐடி மற்றும் ஐடி சார்ந்த ஊழி யர்கள் சங்கங்கள் ஆதரவு இயக்கங்களை நடத்தின. குறிப்பாக கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் பல்வேறு வடிவங்களில் ஆதரவு இயக்கங்கள் நடத்தி உள்ளனர்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆர்ப்பாட்டத்தில், மூத்த தொழிற் சங்க தலைவர் வி.ஜே.கே.நாயர், ஐடி மற்றும் ஐடி சார்ந்த ஊழி யர்கள் சங்கங்களின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கே.சி.கோபி குமார், கிட்டு (KITU) சங்க பொதுச் செயலாளர் சுஹாஸ், யுனைட் (UNITE) சங்க பொதுச்செயலாளர் வெல்கின் மற்றும் நிர்வாகிகள் கண்டன உரை நிகழ்த்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊழியர்களின் கோரிக்கை மனுவை தொழிலாளர் துறை அதிகாரி நேரில் வந்து பெற்றுக்கொண்டார். கண்டன உரைகளுக்கு பின் சட்ட வரைவு மாதிரியை எரிக்கும் நிகழ்வு, தொடர் கண்டன முழக்கங்களுடன் எழுச்சியுடன் நிகழ்ந்தது.
இத்தகைய சட்டத்தைக் கைவிடும் வரைவிலும், ஐடி மற்றும் ஐடி சார்ந்த நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் துறை சார்ந்த நிலையாணை உருவாக்கவும், வலு வாக பிரச்சாரம் முன்னெடுப்போம் என்றும் ‘கிட்டு’ சங்கத்தை பலப் படுத்துவோம் என்றும் சங்க உறுப்பி னர்கள் உறுதிமொழி எடுத்தனர்.