புதுச்சேரியில் காமாட்சியம்மன் கோயி லுக்கு சொந்தமான 50 கோடி ரூபாய் மதிப்பிலான 64 ஆயிரம் சதுர அடி நிலத்திற்கு போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்யப்பட்டது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தனி புல னாய்வுக்குழு அமைத்து வழக் குப்பதிவு செய்தது. போலி ஆவணம் தயா ரித்து விற்பனை செய்ததாக 15 பேர் கைது செய்யப் பட்டனர். போலி ஆவ ணத்தை பதிவு செய்த வில்லியனூர் சார் பதிவாளர் சிவசாமியும் கைது செய்யப் பட்டார்.
இந்த வழக்கில் போலி பாத்திரம் பதிவு செய்த போது பத்திரப்பதிவு துறை இயக்குனராக இருந்த தற்போதைய நில அளவுத்துறை இயக்குனர் ரமேஷ், புதுச்சேரி பதிவாளராக பதவி வகித்து தற்போது மீன் வளத்துறை இயக்குனரான பாலாஜி ஆகிய இருவரும் மோசடி வழக் கில் சேர்க்கப்பட்டனர். இவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தலை மறைவாக இருந்த இவர்களை சிறப்பு அதிரடிப்படையினர் தேடி வந்தனர். இந் நிலையில், சென்னையில் பதுங்கியிருந்த பாலாஜியை சிறப்பு அதிரடிப்படை போலீ சார் கைது செய்து புதுச்சேரிக்கு அழைத் துச்சென்றனர்.